முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

துருக்கியில் நடாத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது கனேடிய ஆயுதம் கைப்பற்றப்பட்டுள்ளமை தொடர்பில் அந்நாட்டு அரசாஙகம் எச்சரிக்கை விடுத்துள்ளது

934

குர்திஸ் தொழிலாளர் கட்சிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஒன்ராறியோவில் தயாரிக்கப்பட்ட ஆயுதம் கைப்பற்றப்பட்டுள்ளமை தொடர்பில், துருக்கி அரசாங்கம் கனடாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தின் இறுதிப்பகுதியில், தடை செய்யப்பட்ட குர்திஸ் தொழிலாளர் கட்சி உறுப்பினர்கள் மீது, நாட்டின் தென்கிழக்கு மாகாணகத்தில் துருக்கிய இராணுவத்தினர் ந்டாத்திய தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலின் போது கைப்பற்றப்பட்ட 15 தாக்குதல் துப்பாக்கிகள் ஒன்ராறியோவைத் தளமாக கொண்ட நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை என்று தெரிவிக்கப்படுகிறது.

PKK எனப்படும் குர்திஸ் தொழிலாளர் கட்சியை கனடாவும் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டுள்ள நிலையில், ஒன்ராறியோவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் எவ்வாறு அந்த குழுவின் கைகளில் போய்ச் சேர்ந்தன என்பது குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கனடாவுக்கான துருக்கி தூதர், குறிப்பாக ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஆயுதக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்குவது தொடர்பில் துருக்கி அரசாங்கம் தனது எதிர்ப்பினை ஏற்கனவே வெளியிட்டுள்ளதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈராக்கில் உள்ளள ஈராக்கிய குர்திய குழு உட்பட, அவ்வாறான ஏனைய பல குழுக்களுக்கு வழங்கப்படும் ஆயுதங்கள், ஐ.எஸ் உள்ளிட்ட மேலும் பல குழுக்களின் கைகளில் போய்ச் சேரும் ஆபத்து உள்ளது என்பதனை கவனத்தில் கொள்ளுமாறு, கனடா உள்ளிட்ட ஏனைய நட்பு நாடுகளையும் தாம் எச்சரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *