வட கொரியா ஆணு ஆயுத சோதனைகளை நடத்தி அமெரிக்காவை மிரட்டி வருவதால் ஏற்பட்டுள்ள பதற்றங்களுக்கு மத்தியில், வட கொரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என அமெரிக்கா அரசு எதிர்பார்க்கவில்லை என அந்நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லெர்சன் கூறியுள்ளார்.
“நாங்கள் வட கொரியாவிற்கு எதிரியல்ல“ என்று குறிப்பிட்ட ரெக்ஸ் டில்லெர்சன், அதே சமயம் வடகொரியாவிடம் இருந்தும் இதே போன்ற கருத்து வரவேண்டும் என அமெரிக்கா விரும்புவதாக தெரிவித்தார்.
இந்நிலையில், அணு ஆயுத சோதனைகள் தொடர்ந்தால்,வட கொரியாவுடன் போரிடும் வாய்ப்பு ஏற்படும் என்று அதிபர் டிரம்ப் தன்னிடம் தெரிவித்ததாக குடியரசு கட்சியின் மூத்த செனட்டர் தெரிவித்தார்.
சமீபத்தில் தாங்கள் நடத்திய ஏவுகணை சோதனை, அமெரிக்காவின் மேற்கு கடற்கரை மற்றும் அதற்கு அப்பால் சென்று தாக்கும் வல்லமை கொண்டது என வட கொரியா கூறியது.
ஒட்டுமொத்த அமெரிக்காவும் இனி தாக்கும் தொலைவில்: எச்சரிக்கும் வட கொரியா
வட கொரியா செல்ல தனது பிரஜைகளுக்கு தடை விதிக்கும் அமெரிக்கா
“வட கொரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும், தற்போதைய ஆட்சி கவிழ வேண்டும் என்றும், கொரிய தீபகற்பத்தில் துரிதமாக மறு இணைப்பு ஏற்பட வேண்டும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மேலும், இரு கொரிய நாடுகளின் எல்லையான 38ஆம் அட்சக் கோட்டின் வட பகுதிக்கு, ராணுவத்தை அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் நாங்கள் விரும்பவில்லை“ என ரெக்ஸ் டில்லெர்சன் கூறுகிறார்.
Previous Postரொறன்ரோவில் வாகன விதிமுறைகளை மீறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
Next Post96 வயது முதியவராக விஜய் சேதுபதி!