முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமொன்று அறிமுகம்.

1834

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டமொன்று அறிமுகம் செய்யப்படும் என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ranil-nz-300916-seithy

நியூசிலாந்து பிரதமருடன் இன்று இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர் நடாத்தப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் கூறியுள்ளார்.

குறித்த இந்தச் சட்டம் எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதமளவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இன்னும் பல சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டியுள்ளதாகவும், அவற்றில் பிரதானமாக பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்குவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு நியூசிலாந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும், நியூசிலாந்து அனைத்துலக மன்னிப்பு சபை வலியுறுத்தியிருந்த நிலையில் இலங்கை பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *