முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

புதிய அரசியலமைப்பு முயற்சி தோல்வியடைந்தால் நாட்டில் மீண்டும் மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்

770

புதிய அரசியல் தீர்வு முயற்சி தோல்வியடைந்தால் நாட்டில் மீண்டும் மோதல் ஏற்பட வாய்ப்புண்டு என்று எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இந்திய பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இலங்கையில் இருந்து இந்தியா சென்ற குழுவில், சம்பந்தனும் பங்கேற்றிருந்த நிலையில், அங்கு பல்வேறு சந்திப்புக்களில் கலந்துக் கொண்ட பின்னர், இலங்கை திரும்பியுள்ள அவர், ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு சென்ற நாடாளுமன்ற குழு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியிருந்த நிலையில், இதன்போதே அரசியல் தீர்வு குறித்து இந்திய பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக இரா சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

30 ஆண்டு கால ஆயுதப் போராட்டத்தால், வடக்கு கிழக்கு மாகாணங்கள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளன எனவும், போர் முடிவடைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், இன்னும் அரசியல் தீர்வு கிடைக்கவில்லை எனவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் அரசியல் தீர்வைப் பெறும் முயற்சியில் தற்போதைய அரசு ஈடுபடுகின்றது என்ற போதிலும், இனவாதிகள் இதனைக் குழப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் எனவும், எது எவ்வாறாயினும், புதிய அரசியல் அமைப்பு உருவாகும் என்ற நம்பிக்கை தம்மிடம் உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா உட்பட பன்னாட்டுச் சமூகம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ள அவர், இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு அமையவேண்டும் எனவும், புதிய அரசியலமைப்பு முயற்சி தோல்வியடைந்தால் நாட்டில் மீண்டும் மோதல் ஏற்பட வாய்ப்புண்டு என்பதனைத் தவிர்க்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அரசியல் தீர்வு விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்ததாகவும், இதற்கு பதில் வழங்கிய இந்திய பிரதமர், இலங்கையில் மீண்டும் போர் ஏற்படுவதற்கு இடமளிக்கமாட்டோம் என்று தெரிவித்தாகவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் காலதாமதமின்றி அரசியல் தீர்வைக் காணவேண்டும் எனவும், இதில் இந்திய அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று நரேந்திர மோடி உறுதியளித்துள்ளதாகவும், எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *