பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் உள்ளக நகர்வுகள் மிகவும் மோசமானதாக உள்ளன எனவும், தமிழ் மக்களுக்கான நீதி கிடைக்கும் வரையில் அனைத்துலக மேற்பார்வை அவசியம் என்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
உண்மைகளை கண்டறியும் பொறிமுறையில் இலங்கையின் நீதித்துறை செயற்பாடுகள் மோசமானவையாகும் எனவும், எனவே அனைத்துலக நீதிமன்ற தலையீடுகள் அவசியம் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.
ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பொறுப்புக்கூறல் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சனாதிபதி ஜெனிவா செல்ல முன்னர் நாம் மனித உரிமை ஆணையாளரிடம் இலங்கையின் உண்மை தன்மையை தெரிவிப்போம் எனவும் அவர் கூறியுள்ளார்.