முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

போரின் இறுதியில் அமெரிக்காவின் மீட்புத் திட்டத்தை இலங்கை அரசு சாகடித்ததாக ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

1443

போரின் இறுதிக்கட்டத்தில், புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் சிக்கியிருந்த மக்களை இந்திய – இலங்கை அரசாங்கங்களுடன் இணைந்து, அமெரிக்க கடற்படையினர் மூலம் மீட்கின்ற விரிவான ஒருங்கிணைந்த திட்டம் ஒன்று இருந்ததாக, இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

அப்போதைய காலகட்டத்தில் கொழும்பில் அமெரிக்கத் தூதுவராகப் பணியாற்றிய பிளேக், கடந்தவாரம் வொசிங்டனில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் பணியாற்றிய அமெரிக்க தூதுவர்கள், இராஜதந்திரிகள் மற்றும் இலங்கையைச் சேர்ந்த அமெரிக்கர்கள் அங்கம் வகிக்கும் அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றிய ரொபேர்ட் ஓ பிளேக், போரின் இறுதிக்கட்டத்தில், புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் சிக்கியிருந்த மக்களை, இந்திய, இலங்கை அரசாங்கங்களுடன் இணைந்து, அமெரிக்க கடற்படையினர் மூலம் மீட்கின்ற, விரிவான ஒருங்கிணைந்த திட்டம் ஒன்று இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
o-plug

எனினும் நோர்வேயின் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்மையும், தன்னையும் விடுதலைப் புலிகள் பணயக்கைதிகளாகப் பிடித்துக் கொள்வார்கள் என்ற அச்சத்தினை காரணம் காட்டிய இலங்கை அரசாங்கம் அந்த யோசனையை சாகடித்து விட்டது எனவும், ஆனால் சொல்ஹெய்மையும், தன்னையும் விடுதலைப் புலிகள் பணயக் கைதிகளாகப் பிடித்துக் கொள்வார்கள் என்ற இலங்கையின் குற்ற்ச்சாட்டை தான் நம்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது விடுதலைப் புலிகளின் தலைவரை மீட்கின்ற முயற்சி என்றும் கூட உணர்வுகள் இருந்த போதிலும், அமெரிக்க கடற்படைப் படகுகள் மூலம், ஒவ்வொருவரையும் இலங்கைவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்வதே இந்த திட்டமாக இருந்தது எனவும் அவர் விபரித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் கப்பல்களை மூழ்கடிக்க அமெரிக்கா உதவியதாக இன்னொரு விவாதம் இருப்பதாகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் கப்பல்கள் இருக்கும் இடத்தை கண்டறிவதற்கு தாம் இலங்கைவுக்கு உதவிய போதிலும், சிறிலங்கா கடற்படை தான் உண்மையில் அவற்றை தாக்கி அழித்ததாகவும், விடுதலைப் புலிகளுக்கு உதவும் எண்ணம் தமக்கு ஒருபோதும் இருக்கவில்லை எனவும் ரொபேர்ட் ஓ பிளேக் மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *