மக்களவைத் தேர்தலில் அதிமுக – திமுகவுடன் கூட்டணி கிடையாது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும்.
திமுக, அதிமுகவுடன் கூட்டணி கிடையாது.
நல்லதை பரிமாற முற்படும்போது, அவசரமாக கைகுலுக்க வேண்டியதில்லை.
எங்கள் கையில் கறை படிந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.
40 தொகுதியிலும் தனித்து போட்டியிடுவதற்கான முயற்சியில் மக்கள் நீதி மய்யம் இருக்கிறது.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்