முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரிடம் பயங்கர வாதத் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்

676

விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகள் மற்றும் புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்பு வைத்துள்ளார் என்று குற்றச்சாட்டு முன்வைத்து, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரிடம், கொழும்பில் உள்ள பயங்கர வாதத் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

இன்று காலை கொழும்பு 4ம் மாடியில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரும் சுயாதீன ஊடகவியலாளருமான கிருஸ்ணகுமாரிடம், பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விசாரணையின் போது விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் தயாமோகனுக்கும் தங்களுக்கும் என்ன தொடர்பு எனவும், வெளிநாட்டில் உள்ள ஊடகங்களுக்கு அரசாங்கத்தை பற்றி தவறாக செய்திகளை அனுப்புகின்றீர்கள் என்றும் அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புலம்பெயர்ந்த புலிகள் அமைப்புக்களுடன் தொடர்பை வைத்துள்ளீர்கள் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டதுடன், விடுதலைப் புலிகளிடம் பயிற்சி எடுத்துள்ளீர்களா எனவும் அவரிடன் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் இல்ஙகை அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளீர்களதாகவும், இல்ஙகை அரசாங்கத்திற்கு எதிராக புலம்பெயர்ந்த அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர் ஊடகங்களுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் அவர் மீது குற்றசசாட்டுக்ள முன்வைக்கப்பட்டதுடன், மேலும் பல கேள்விகளை கேட்டு தம்மிடம் விசாரணைகளை நடாத்தி வாக்குமூலம் பெறப்பட்டதாக கிருஸ்ணகுமார் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *