படுகொலைசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று காலை மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்னுடைய மனைவியின் சார்பில் சட்டத்தரணி சுமந்திரனால் குறித்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவிற்கான விசாரணை நாள் இதுவரை குறிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சுமந்திரன், ரவிராஜ் கொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பிலுள்ள சட்டவிரோதமான தீர்வுகள் தொடர்பாக இந்த மேன்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இந்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பளிக்கும்போது, மீள்விசாரணையொன்றை ஏற்படுத்துமாறு கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.