வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள எழுச்சிப் பேரணிக்கு ஆதரவு கோரி வட மாகாணம் தழுவிய வாகன பவனி இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகன பவனி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து இன்று ஆரம்பமாகியது.
யாழ்ப்பாண மாவட்டம் முழுவதும் பயணிக்கவுள்ள இந்த வாகன பவனி, அதனை தொடர்ந்து வவுனியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு செல்லவுள்ளது.
தமிழின இழப்பிற்கு நீதி கோரி எதிர்வரும் 16ஆம் திகதி மாபெரும் எழுச்சி பேரணியொன்றை யாழ். பல்கலைக்கழக சமூகம் முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த எழுச்சி பேரணி தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆதரவைத் திரட்டும் நோக்கில் இவ்வாகனப் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Postஅமெரிக்காவுடனான அணுவாயுதங்கள் தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்த நேரிடலாம் என்று வடகொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது
Next Postஇலங்கை தமிழர்களை உலகில் யாராலும் எதுவும் செய்துவிட முடியாதென தென்னிந்திய நகைச்சுவை நடிகர் விவேக்