முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபடும் அவர்களது உறவினர்கள், தமது போராட்டத்தின் 688ஆவது நாளினை கவனயீர்ப்பு போராட்டமாக முன்னெடுத்தனர்.

390

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபடும் அவர்களது உறவினர்கள், தமது போராட்டத்தின் 688ஆவது நாளினை கவனயீர்ப்பு போராட்டமாக முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டம் இன்று (புதன்கிழமை) அவர்கள் வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் A 9 வீதிக்கருகில் அமைந்துள்ள இடத்தில் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிவில் அமைப்புக்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழர் தாயகத்தில் படையினரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டுமென, வவுனியாவில் கடந்த 688 நாட்களாக இம்மக்கள் இரவு பகலாக போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *