முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

விண்வெளியில் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தியது இந்தியா’

509

விண்வெளியில் இருக்கும் செயற்கைக்கோள் ஒன்றை சுட்டு வீழ்த்தும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார். இந்த தொழில்நுட்பத்தை கொண்டுள்ள உலகின் நான்காவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஏவுகணை செயற்கைக்கோளை மூன்று நிமிடங்களில் துல்லியமாக சுட்டு வீழ்த்தியதாக அவர் தெரிவித்தார்.

#MissionShakti என்று பெயரிடப்பட்ட இந்த விண்வெளித் திட்டம் முழுவதும் இந்தியத் தொழில்நுட்பங்களைக் கொண்டே செய்லபடுத்தப்பட்டது என்றார் மோதி.

இந்தியா ‘லோ எர்த் ஆர்பிட் சேட்டிலைட்’ எனப்படும் தாழ்வான உயரத்தில் பறக்கும் செயற்கைக்கோள் ஒன்றை சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும், இந்தியா ஒரு விண்வெளி வல்லரசாக ஏற்கனவே உருவெடுத்துள்ளது என்றும் தனது உரையில் மோதி குறிப்பிட்டார்.

இந்திய விஞ்ஞானிகள் குறித்து நமது பெருமை என்றும் பூமியை நேரலையாக கண்காணிக்கும் தொழில்நுட்பம் இந்தியாவிடம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு ஆற்றிய உரையில் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

யற்கைக்கோள்கள் ‘லோ எர்த் ஆர்பிட்ஸ்’ எனப்படும்.

இன்று காலை 11.45 மணி முதல் 12.00 மணி வரை நாட்டு மக்களுக்கு உரையாற்றப்போவதாக அவர் முன்னதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். தொலைக்காட்சி, வானொலி அல்லது சமூக ஊடகங்கள் மூலம் தனது உரையை கேட்குமாறு அவர் கோரிக்கை விடுத்து இருந்தார்.

12.15 மணிக்கு மேல் உரையை தொடங்கிய அவர், இந்திய விண்வெளி துறையின் சாதனைகள் குறித்து பேசினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *