முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு அளிக்கப்பட்டது – செல்வம் அடைக்கலநாதன்

1750

தாம் முன்வைத்த 10 அம்ச கோரிக்கையை இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர்.

முன்னதாக நம்பிக்கையில்லா பிரேரரணை தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தியிருந்தது.

இதன்போது இந்த 10 அம்ச கோரிக்கையை கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்திருந்ததுடன், இதற்கு எழுத்துமூல உறுதிமொழி தந்தால், பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க முடியும் என்று கூறியிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த 10 அம்ச கோரிக்கையை முன்வைத்த போது, சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அதன் பின்னர் 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு இணக்கப்பாடு காணப்பட்டது எனவும், அந்த நிபந்தனைகளின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவு வழங்கியதாகவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால், வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு துரிதமாக அரசியல் தீர்வு காண்பது, டுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுதல், பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள், கட்டடங்களில் இருந்து சிறிலங்கா படையினர் முற்றாக விலக வேண்டும், அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டும், போர்க்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வடக்கு, கிழக்கில் வாழும் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தல், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உறுதி செய்தல், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வசிக்காதவர்களுக்கு இந்த மாகாணங்களில் நியமனங்கள் வழங்குவதைத் தவிர்த்தல், வடக்கு, கிழக்கின் 8 மாகாணங்களுக்கும் மாவட்டச் செயலர்களாக தமிழர்களை நியமித்தல், வடக்கு, கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் போது, இரண்டு மாகாணசபைகளுடன் இணைந்தே முன்னெடுத்தல் ஆகிய கோரிக்கைளையும் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டதாக செல்வம் அடைக்கநமான் தெரிவிது்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *