முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

30 முதல் 40 ஆண்டுகளில் வடக்கு மாகாணம் அரை பாலைவனமாக மாறும்!

519

காலநிலை மாற்றத்தின் காரணமாக வட மாகாணமானது கடுமையான சவால்களை எதிர்நோக்குகின்றது என நகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் அடுத்த 30 முதல் 40 ஆண்டுகளில் வடக்கு மாகாணமானது அரை பாலைவனமாக மாறும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலயும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாணமானது மோசமான பாதிப்புற்ற பிரதேசமாகும், மழை பற்றாக்குறை, வெள்ளம் மற்றும் கடலால் சூழப்பட்ட வடக்கு மாகாணத்தை எதிர்மறையாக பாதிக்கிறது.

அதற்கான நிலையான அபிவிருத்தியை உறுதிப்படுத்துகின்ற அதேவேளை, மாகாணத்தை அத்தகைய அழிவிலிருந்து காப்பாற்றுவதற்கு ஒரு நடைமுறை தேவை” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *