புதிய அரசியலமைப்பு தொடர்பாக அரசாங்கத்தின் வெளிப்பாடுகள் எமக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதாக காணப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
எனினும்,தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யவல்லதான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்மொழிவுகள் அடுத்தவாரம் நிபுணர்குழுவிடத்தில் சமர்ப்பிக்கப்படும் என்ற முடிவில் மாற்றமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய அரசியல் அமைப்புக்கான செயற்பாட்டினை நாம் எடுக்கப்படுகின்ற முயற்சிகளை முழுமையாக ஒதுக்காது, நாங்களாகவே அந்தக் கருமத்தினை தவிர்த்தவர்கள் என்ற குற்றச்சாட்டுகளுக்கு இடமளிக்காது எமது கடமைகளை முன்னெடுத்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த பணிகள் இதயசுத்தியுடன், இந்த நாட்டின் எதிர்காலத்தினை கருத்திற்கொண்டு நியாயமான முறையில் இடம்பெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக உள்ளது என்று மேலும் தெரிவித்தார்.