ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்து குறித்து விசாரணை மேற்கொள்ளவே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவை நாளைய தினம் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அசோக் அபேசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாவகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளதோடு உள்நோக்கமற்ற விசாரணைகளை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.