யாழ். அச்சுவேலி பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்பு கூட்டு எச்சங்கள் தொடர்பாக மல்லாகம் நீதிவான் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார்.
அச்சுவேலி பத்தமேனி சூசையப்பர் வீதியில் மின்சார கம்பம் நடுவதற்காக நிலத்தை தோண்டிய போது மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன.
இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இன்றைய நாள் மல்லாகம் நீதிவான் ஆனந்தராஜாவும் சட்ட வைத்திய அதிகாரி மயூரதனும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
இன்றையநாள் குறித்த அந்தப் பகுதி மேலும் தோண்டப்பட்ட போது, மேலதிகமாகவும் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டிருந்ததுடன். கால், கை, மண்டையோடு பகுதிகள் மீட்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக அவை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.