திருகோணமலை நகரசபையின் கீழ் மீண்டும் திருகோணமலை மொத்த மீன் சந்தை கொண்டு வரப்படவேண்டும், அதன் வரிப்பணம் நகர சபைக்கே செலுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து திருகோணமலை நகரசபை உறுப்பினர் சிவகுமார் இன்று காலை 8 மணி முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன் எடுத்துள்ளார்.
இந்த, இடத்திற்கு திருகோணமலை நகரசபைத் தலைவர் இராஜநாயகம், உப தலைவர் கோகுல்ராஜ் காலை 9.20 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் நகரசபை உறுப்பினருடன், கலந்து உரையாடினர்.
இதன்போது விடயம் சம்மந்தமாக தான் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், போராட்டத்தை கைவிடும் படியும் நகரசபைத் தலைவர் உறுப்பினரிடம் உறுதி மொழி வழங்கி இருந்தார்.
இதனை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டதோடு, எதிர்வரும் காலத்தில் இவ்விடயங்கள் தொடர்பில் போராட்டங்கள் எழுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.