ஒன்ராரியோவிலும், பீல் பிராந்தியத்திலும் இன்றையதினம் அத்தியாவசிய தேவைகள் அற்ற வியாபார நிலையங்கள் அனைத்தும் மீள திறக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 23ஆம் திகதியிலிருந்து வீட்டில் இருக்கும் முடக்கல் விதிமுறை அமுலாக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றையதினம் முதல் வரையறுக்கப்பட்ட விதிகளுக்கு அமைவாக மீண்டும் வியாபாரா நிலையங்கள் அனைத்தும் திறக்கப்பட்டன.
குறிப்பாக வியாபார நிலையத்திற்குள் பத்து பேர் வரையில் அனுமதிக்கலாம் என்ற கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டிருந்தன.
அத்துடன் இரு பிரதேசங்களிலும் கொரோனா பாதுகாப்பு வதிமுறைகளை பின்பற்றுதல் தொடர்பான விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.