ஒன்ராரியர்கள் அனைவருக்கும் ஜுலை இறுதிக்குள் அல்லது ஆகஸ்ட் நடுப்பகுதிக்குள் கொரோனா தடுப்பூசியைச் செலுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராரியோவில் கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்கு பொறுப்பாகவுள்ள ஓய்வுபெற்ற ஜெனரல் ரிக் ஹில்லியர் (Rick Hillie) இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
டொராண்டோவில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் மாகாணத்தில் 3ஆயிரத்து 422 கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு 69உயிரிழப்புச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய நிலையில் கொரோனா தடுப்பூசி விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தற்காலிக்கத்தடைகள் நீங்கும்போது அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் இந்த நிகழ்ச்சி நிரல் பூரணமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.