அனைத்து ஒன்ராரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்குவது தொடர்பான இறுதி அறிவிபுக்கள் இன்னமும் சில நாட்களில் வெளியாகவுள்ளதாக பொதுசுகாதாரத்துறையின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
தற்போது 80வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதனை அடுத்து 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதேநேரம் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட மருந்தளவைச் செலுத்தும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஏப்ரல் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது என்றும் மாகாண பொதுசுகாதார அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.