அனைத்து கனடியர்களுக்கும் கொரோனா தடுப்பூசியைப் போடுவதற்காக விரைந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.
இதற்கான சாத்தியமான நிலைமைகள் அதிகமாக காணப்படுவதாகவும் வினைத்திறன் மிக்க விநியோகப் பிரிவு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டர்.
எதிர்வரும் ஆண்டின் இறுதிக்குள் அனைத்து கனடியர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்குவதை இலக்காக கொண்டுள்ள போதும், அந்தப் பணிகள் செப்டெம்பருக்கு முன்னதாக நிறைவடையும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் கூறினார்.