1.5மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை அமெரிக்காவிடமிருந்து பெறுவதற்கு கனடா தீர்மானித்துள்ளது.
அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும் இடையில் கொரோனா தடுப்பூசிகளைப் பகிர்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் அண்மையில் நடைபெற்றிருந்தன.
எனினும் இந்த பேச்சுவார்த்தைகள் பற்றி பொதுவெளியில் எவ்விதமான கருத்தக்களும் இருநாடுகளின் அதிகாரிகளால் பகிரப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் அமெரிக்கா முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசியை கனடாவிற்கு அனுப்பி வைக்கவுள்ளது. இந்த தடுப்பூசிகள் யாவும் அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) உற்பத்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.