அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியில் நபர் ஒருவர் காவல்துறையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற் கொண்டதில் 6 பேர் காயமடைந்துள்ளதுடன், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கரோலினா மாகாணத்தில் உள்ள புளோரன்ஸ் நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றுக்கு வழக்கு விசாரணை தொடர்பான அழைப்பாணை வழங்குவதற்காக காவல்துறையினர் சென்ற போது இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு இரண்டு மணி நேரம் தொடர்ந்ததாகவும், பின்னர் துப்பாக்கிச் சூடு நடாத்திய நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.