அமெரிக்காவின் பேச்சுவார்த்தைக்கான அனைத்து முயற்சிகளையும் புறக்கணிப்பதாக வட கொரியா அறிவித்துள்ளது.
அமெரிக்கா விரோதக் கொள்கையைக் கொண்டுள்ளதாகவும் வொஷிங்டனுக்கும் பியோங்யாங்கிற்கும் இடையில் எந்தவொரு தொடர்பும் அல்லது உரையாடலும் இருக்க முடியாது என்றும் வட கொரியாவின் முதல் வெளியுறவுத் துணை அமைச்சர் சோ சோன் ஹுய் (SHO SON HUI) தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தனது விரோதக் கொள்கையில் இருந்து திரும்பாவிட்டால் எதிர்காலத்தில் அமெரிக்காவின் அத்தகைய பேச்சுவார்த்தை முயற்சியை நாங்கள் புறக்கணிப்போம்.
அமெரிக்காவின் புதிய ஆட்சியானது, வட கொரியாவின் அச்சுறுத்தல் என்ற ஒரு பைத்தியக்காரத்தனமான கோட்பாட்டையும், முழுமையான அணுசக்தி மயமாக்கலை வடகொரியா மேற்கொள்கிறது என்ற ஆதாரமற்ற சொல்லாடல்களையும் மட்டுமே முன்வைக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.