முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தில் நடாத்தப்பட்டு துப்பாக்கிச்சூடு திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்

923

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டு 5 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவத்தை திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று அந்த நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அண்மைக் காலத்தில் அந்த செய்தித்தாள் நிறுவனத்துக்கு சமூக ஊடகங்களில் வன்முறை அச்சுறுத்தல்கள் வந்துள்ளதைச் சுட்டிக்காடடியே அவர்கள் அவ்வாறு கூறியுள்ளனர்.

அத்துடன் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவதுடன் தொடர்புடைய சந்தேக நபரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்ற நிலையில், அவர் அதிகாரிகளுடன் விசாரணைக்கு ஒத்துழைக்க, மறுப்பதாக கூறப்படுகிறது.

அத்துடன் அவர் அடையாளத்தை கண்டுபிடிக்க முடியாத வகையில் விரல் ரேகைகளை அழித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

போலி கையெறி குண்டுகளையும் கண்ணீர் புகை குண்டுகளையும் தனது பையில் அவர் வைத்திருந்ததாகவும், மேலும் பெரிய துப்பாக்கியை பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ள காவல்துறையினர் மேற்கொண்டு எந்தவித தகவல்களையும் வெளியிடவில்லை.

அத்துடன் வெடிகுண்டாக இருக்கலாம் என கருதிய பொருள் ஒன்றை தாங்கள் செயலிழக்கச் செய்ததாகவும் காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *