அமெரிக்காவில் கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்பு 6 இலட்சத்தை எட்டும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்ட ஜோ பைடன்,
“ நாட்டில் கொரோனாவால் ஏற்கனவே 4 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்பு எண்ணிக்கை 6 இலட்சத்தை எட்டும்.
மக்கள் பசியால் பாதிக்கப்படலாம். வேலை இழப்புகள் மீண்டும் அதிகரிக்கலாம். நாம் உடனடியாக செயற்பட வேண்டும்.
தேசிய அவசரநிலையில் உள்ளது போல நாம் செயற்பட வேண்டும்.” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.