அமெரிக்காவுடனான எல்லை வழியான அவசியமற்ற போக்குவரத்துகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மேலும் 30 நாட்களுக்கு நீடிக்கப்படுவதாக கனடா அறிவித்துள்ளது.
கனடாவின் பொது பாதுகாப்பு மற்றும் அவசரநிலை தயார்படுத்தல் அமைச்சர் பில் பிளேயர் (Bill Blair) கீச்சகப் பதிவு ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான அவசியமற்ற பயணங்களுக்கான பயணக் கட்டுப்பாடுகள் ஏப்ரல் 21ஆம் நாள் வரை நீடிக்கப்பட்டுள்ள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரொனா தொற்றில் இருந்து கனேடியர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக சிறந்த பொது சுகாதார ஆலோசனையின் அடிப்படையில், தொடர்ந்து முடிவுகளை எடுப்போம் என்றும், அந்தப் பதிவில் அவர் கூறியுள்ளார்.