ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீதான ஏவுகணைத் தாக்குதலை அடுத்து, அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்,
“ ஏவுகணைத் தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை என்ற போதும், இந்த தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்பதை நாங்கள் அடையாளம் கண்டு வருகிறோம்.
இதற்கு தக்க பதிலடி கொடுப்போம். தற்போது நாங்கள் தாக்குதல் நடத்துவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம்.” என்று கூறியுள்ளார்.