விவசாயிகள் போராட்டத்தை சாதகமாக பயன்படுத்தி நாட்டை துண்டாட முயற்சிக்கும் குழுக்கள் மீது மோடி அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவி இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ள நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மோடி அரசு விவசாயிகளை மதிக்கிறது. அதே சமயத்தில் விவசாயிகள் போராட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த பார்க்கும் குழுக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.