இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு மாற்றாக அயோத்தியில் நிர்மாணிக்கப்படவுள்ள மசூதிக்கு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி அடிக்கல் நாட்டப்படவுள்ளது.
இதற்கான மாதிரிவரைப்படம் எதிர்வரும் சனிக்கிழமை வெளியிடப்படவுள்ளதாக பாபர் மசூதி நிர்மாணப் பணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த மசூதி வட்ட வடிவில் பல்லாயிரம் பேர் ஒரே நேரத்தில் தொழுகை நடத்தும் வகையில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அறக்கட்டளையின் உறுப்பினர் அக்தர் குறிப்பிட்டுள்ளார்.
முகலாய பேரரசர் பாபரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மசூதி 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி இடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.