பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாளாந்த வேதனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பெருந்தோட்ட நிறுவனங்களிலும் ஆயிரம் ரூபா வேதனம் வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
தலவாக்கலை பகுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சலுகைகளும் முன்னர் போன்றே வழங்கப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் வலியுறுத்தியுள்ளார்.