தனது கைதுக்கு எதிராக ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி (Alexei Navalny) தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பரோல் விதிமுறை மீறல் வழக்கில் தன்னை காவல்துறையினர் கைது செய்துள்ளதை எதிர்த்து, மொஸ்கோ பிராந்திய நீதிமன்றத்தில் அவர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்ததது.
அதில், நச்சுத் தாக்குதல் பாதிப்புக்காக ஜேர்மனியில் அலெக்ஸி நவால்னி (Alexei Navalny) சிகிச்சை பெற்று வந்ததால் பரோல் விதிமுறைகளின்படி அதிகாரிகள் முன் கையெழுத்திட முடியவில்லை என்று வழக்குரைஞர்கள் விளக்கமளித்திருந்தனர். எனினும், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதற்கிடையே அலெக்ஸி நவால்னி (Alexei Navalny) ஆதரவு தலைவர்கள் பலரை காவல்துறையினர் கைது செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.