அவுஸ்ரேலிய நாடாளுமன்றம் நாளை ஆரம்பமாகும் நிலையில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தலைநகரில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் ஸ்கொட் மொரிசனுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள சட்டமா அதிபர் கிறிஸ்டியன் போர்ட்டர் மற்றும் ஸ்கொட் மொரிசன் தலைமையிலான லிபரல் கட்சியின் முன்னாள் ஊழியருக்கு எதிராகவே குறித்த போராட்டம் இடம்பெறவுள்ளது.
பெண்களுக்கு சமத்துவம் மற்றும் நீதி கோரி நாடு முழுவதும் நாளை திங்கட்கிழமை 43 இடங்களில் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.