அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) கொரோனா தடுப்பூசி பாதுகாப்பனது என்று கனடிய நோய்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது.
அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) தடுப்பூசியானது பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டதன் பின்னர் இரத்தக்கட்டிகளை உருவாக்குகின்றது என்று ஐரோப்பாவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) தடுப்பூசிகளை தருவிப்பதற்கு முற்பதிவு செய்துள்ள கனடா அதுபற்றிய ஆய்வுகளை மேற்கொண்டிருந்தது.
இந்நிலையில் அஸ்ட்ராஜெனெகா(AstraZeneca) தடுப்பூசியால் எவ்விதமான பக்கவிளைவுகளும் இல்லை என்று கனடிய விஞ்ஞான ஆராய்ச்சி தரப்புக்கள் நேற்று தெரிவித்தன.
இந்நிலையில் அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) தடுப்பூசி தொடர்பில் ஆராயந்திருந்த கனடிய நோய்த் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக்குழு தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.
அதிலும் 65வயதுக்கு மேற்பட்டவர்கக்கு அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) தடுப்பூசி எவ்விதமான பாதிப்புக்களையும் ஏற்படுத்தாது என்றும் ஆலோசனைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.