அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக 40 தொகுதிகளில் போட்டியிட இடமளிக்காவிட்டால், தனித்து களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா ஒதுக்கியது போன்று 41 தொகுதிகளை இந்த தேர்தலிலும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தே.மு.தி.க. கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆனால், அ.தி.மு.க. 15 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று கூறியுள்ளதால், தே.மு.தி.க. அதிருப்தி அடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் கேட்ட இடங்கள் கிடைக்காவிடின், 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கவும் தே.மு.தி.க. திட்டமிட்டுள்ளது.
அதேவேளை, கமல்ஹாசனுடன் இணைந்து 3-வது அணியை அமைப்பது குறித்தும், தே.மு.தி.க. ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.