மியன்மாரில், ஆங் சான் சூ கியின் தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைமை அலுவலகம் இராணுவத்தினால் சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 9.30 மணியளவில் பல இராணுவ அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அலுவலகத்துக்குள் நுழைந்து சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.
மீண்டும் ஜனநாயக ஆட்சி மலர வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை இன்று ஐந்தாவது நாளாகவும், மியான்மரில் போராட்டங்கள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன.