முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஆப்கானிஸ்தானில் இன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

843

ஆப்கானிஸ்தானில் மசூதி மீது பயங்கரவாதிகள் இன்று நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 80இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள அந்த ஷியா மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் இந்த தற்கொலைப்படை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஐ.எஸ். மற்றும் தலிபான் அமைப்பினர் தாக்குதல்களை மேற்கொள்வது அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *