முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் இன்று நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

757

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் தலிபான்கள் இன்று நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தலிபான்களின் தாக்குதல்களை கட்டுப்படுத்த தவறியதாக ஆப்கான் அரசாங்கத்தைக் கண்டித்தும், பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு வலியுறுத்தியும் நேற்றிரவில் இருந்து மாணவர்களும், பொதுமக்களும் காபுல் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் போராட்டக்காரர்கள் அதிகம் குவிந்திருந்த இஸ்திக்லால் பள்ளியின் அருகே தலிபான்களின் தற்கொலைப் படையை சேர்ந்த ஒருவர் மனித வெடிகுண்டு தாக்குதலை இன்று நடாத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் 6 பேர் கொல்லப்பட்டதுடன், இருபதுக்கும் அதிகமானவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *