முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க வேண்டும்; அரசாங்கம்

213

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக நிர்ணயித்து வெளியான வர்த்தமானி அறிவித்தலின் படி தோட்ட நிறுவனங்கள் மார்ச் 5ஆம் திகதி முதல் தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக ஆயிரம் ரூபாவை வழங்கவேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

அவ்வாறு வழங்கப்படாத பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தொழில் ஆணையாளருக்கு இருப்பதாக தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக நிர்ணயித்து வெளியான வர்த்தமானிக்கு இடைக்கால தடை விதிக்குமாறு பெருந்தோட்ட நிறுவனங்கள் முன்வைத்த கோரிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *