ஒன் ராரியோவில் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவை மீறிய ஆறு இளைஞர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 23ஆம் திகதி மாலை நடந்த சம்பவத்திற்காக 18 முதல் 19 வயதுக்குட்பட்ட ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோபால்ட் மற்றும் டெமிஸ்கேமிங் கடற்கரைகளில் இருந்த வணிகங்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் முட்டைகளை எறிந்ததாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மீள் திறப்பு சட்டத்தின் கீழ், வரும் குற்றச்சாட்டுக்கு 880 டொலர்கள் அபராதம் விதிக்கப்படுகிறது.
இதேநேரம் இவர்கள் மார்ச் மாதம் 2ஆம் திகதியே நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.