மேற்கு வங்க மாநில சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதலாவது கூட்டத்தொடர், ஆளுநர் அழைக்கப்படாமல் நடந்தேறியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், மாநில ஆளுநருக்கும் இடையில் முரண்பாடுகள் நீடித்து வருகின்றன.
இந்தநிலையில், இந்த ஆண்டுக்கான சட்டசபையின் முதல் கூட்டத்துக்கு ஆளுநருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்றுவது வழக்கம் என்ற போதும், ஆளுநர் அழைக்கப்படாமல் கூட்டம் நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜக உறுப்பினர்கள், அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளும் இன்றைய கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர்.