முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இணையவழி தாக்குதல் நடத்தும் திறனை சீனா கொண்டுள்ளது

254

இந்தியா மீது இணையவழி தாக்குதல் நடத்தும் திறனை சீனா கொண்டுள்ளதாக இராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்தியா, சீனா இடையே இணையவழி துறையில் மிகப் பெரிய வித்தியாசம் நிலவுகிறது. புதிய தொழிநுட்பங்கள் மீது அதிக நிதியை சீனாவால் முதலீடு செய்ய முடிகிறது.

கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே தொழில்நுட்பத்தில் திறன் சார்ந்த இடைவெளி நிலவுகிறது.

இதனால் இந்தியா மீது இணையவழி தாக்குதலை நடத்த சீனாவால் முடியும். அவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும்.

இணையவழி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு தொடர்பாக எழும் பிரச்சினைகளுக்கான தீர்வுக்கு மேற்கத்தேய நாடுகளைச் சார்ந்திருப்பதை இந்தியா குறைத்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *