முக்கிய செய்திகள்

இத்தாலியின் லாசியோ பிராந்தியத்தில் தடுப்பூசி முற்பதிவு

226

தலைநகர் ரோமை மையமாகக் கொண்ட இத்தாலியின் லாசியோ பிராந்தியம், அஸ்ட்ராஸெனெகா மற்றும் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வதற்கான முன்பதிவுகளை மேற்கொள்ளுமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

எனினும், முன்னதாக குறித்த தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கு இரத்த உறைவு ஏற்படுவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டினால், மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டுவதாக கூறப்படுகின்றது.

பல ஐரோப்பிய நாடுகளைப் போலவே, இத்தாலியும் கடந்த மார்ச் மாதத்தில் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்தியது.

இதனால் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசிகளின் விநியோகங்களும் தற்காலிகமாக முடக்கப்பட்டன. தற்போது இந்த இரு தடுப்பூசிகளின் பயன்பாடுகளும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *