கொரொனா தொற்றுக்கான பைசர் தடுப்பூசி இந்த வார இறுதிக்குள் தீர்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
ஒன்ராறியோவுக்கு அதிக கொரோனா தடுப்பூசிகள் தேவைப்படுவதாகவும், அதனால், அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்குமாறும் அவர், கனடா சுகாதாரத் துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள சுகாதார நிறுவனங்களால் இந்த தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் ஒன்ராறியோ முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தடுப்பூசி சமமாக பிரிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள டக் போர்ட், தடுப்பூசி பற்றாக்குறைக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது குற்றச்சாட்டை முன்வைக்க மறுப்புத் தெரிவித்துள்ளார்.