முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் பெருவெள்ளத்தைத் தேசியப் பேரிடராக அறிவிக்குமாறு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்

695

இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் பெருவெள்ளத்தைத் தேசியப் பேரிடராக அறிவித்து நிவாரணப் பணிகளுக்குக் கூடுதலான நிதியை ஒதுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

தமது கீச்சகப் பதிவில் இதனை வலியுறுத்தியுள்ள அவர், குறித்த இந்த நடவடிக்கை அவசியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கேரளா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இந்த பேரிடரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன், இடைக்கால நிவாரண நிதியாக 500 கோடி ரூபா வழங்குவதாக அறிவித்துள்ளார்.

அத்துடன் மீட்புப் பணிகளில் கூடுதலான உலங்குவானூர்திகள், படகுகளும் ஈடுபடுத்தப்படும் என்பது உள்ளிட்ட மேலும் பல உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

கேரளா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கைப் பேரிடரில் இதுவரை 324 பேர் உயிழிழந்ததபாக மாநில அரசாங்கம் தெரிவித்தது.

2 மில்லியனுக்கும் அதிகமானோர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர் என்றும், மீட்புப் பணிகள் இன்னமும் தொடரும் நிலையில் உதவியை எதிர்பார்த்து வெள்ளத்தில் சிக்கிய நிலையில் இன்னமும் பலர் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *