முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இந்தியாவில் இந்த ஆண்டின் இதுவரையான காலத்தில் இயற்கை பேரிடரில் 993 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

648

இந்த ஆண்டில் கனமழை மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் இதுவரை 993 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கேரளா, உத்திரப்பிரதேசம், மேற்கு வங்காளம் உள்பட பல மாநிலங்களில் இந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இந்திய மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலான்மை பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 70 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டதாகவும், அதில் 17 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதேவேளை கடந்த ஆண்டில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1200, அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் 514 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *