தமிழகம் உள்ளடங்களாக இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று நடைபெறுகின்றது.
முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சுமார் 30 கோடி பேருக்கு முதற்கட்ட தடுப்பூசி போட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக பஞ்சாப், அசாம், ஆந்திரா மற்றும் குஜராத்தில் இரண்டு நாட்கள் ஒத்திகை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகின்றது.
இதேவேளை தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரி, நெல்லை என 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகின்றது.