ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்தியா, ரஷ்யா இடையே கிட்டத்தட்ட 70 ஆயிரம் கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
அதிபர் விளாடிமிர் புட்டின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஐதராபாத் இல்லத்தில் இன்று சந்தித்துப் பேச்சு நடாத்தியதை அடுத்து இராணுவம் மற்றும் விண்வெளி சார்ந்த துறைகளை உள்ளடக்கிய குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
இந்த ஒப்பந்தங்களின் படி ஏவுகணைகள், போர் துப்பாக்கிகள் மற்றும் போர் கப்பல்கள் என்பனவற்றை இந்தியா ரஷ்யாவிடமிருந்து வாங்கவுள்ளதுடன், சைபீரிய எல்லைக்கு அருகே ரஷியாவின் நோவோசிபிர்ஸ்க் நகரில் விண்வெளி கண்காணிப்பு மையத்தை இந்தியா அமைக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.