சீன படைகள் எல்லையில் அத்துமீறினால் பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய விமானப் படை தளபதி பதாரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“இந்தியாவுக்கு 8 ரபேல் போர் விமானங்கள் வந்து சேர்ந்து விட்டன.
ஜனவரி இறுதிக்குள் மேலும் 3 விமானங்கள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய விமானப் படையில் ரபேல் விமானங்களை சேர்க்கும் பணி வரும் 2023ம் ஆண்டுக்குள் நிறைவடையும்.
கிழக்கு லடாக்கில் சீன படைகள் அத்துமீறினால் நாமும் பதிலடி கொடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.